நீங்கள் ஆயிரத்தில் ஒருவன் இன்னும் பார்க்க வில்லையெனில் கண்டிப்பாக இது உங்களுக்கான பதிவு இல்லை.இங்கேயே ஓடி விடுங்கள். இந்த பதிவில் படத்தின் கதையோ அதற்கான விமர்சனமோ கிடையாது.
இனி பதிவு
ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்ததற்காக இந்த வருடம் தமிழக அரசு செல்வராகவனுக்கு நூறு பொற்காசுகளும் நூறு கசையடிகளும் கொடுக்க வேண்டும். உண்மையில் இந்த மாதிரி ஒரு மகா ரசனையான மற்றும் ஒரு கோமாளித்தனமான படத்தை செல்வராகவனைத் தவிர வேறு யாராலும் தமிழ் சினிமாவில் எடுக்க முடியாது.
வெகு நாள் படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பை நிச்சயமாக முதல் பாதி திருப்திப்படுத்துகிறது. முதல் பாதியில் மூன்று முக்கிய கதாபாத்திரங்களான கார்த்தி, ரீமாசென்,ஆண்ட்ரியா ஆகியோரின் Characterization பக்கா. ஜெட் வேகத்தில் திரைக்கதை நம்மை அழைத்து செல்கிறது.இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்துகிறது. ஆனா அங்க போயி வச்சாங்க பாருங்க ஒரு twist. சத்தியமா தாங்க முடியல.
சமீப காலமாக வெளியாகும் எல்லா படங்களிலும் முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் இல்லாமல் தொய்வாகவே இருக்கிறது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் கொஞ்சம் வித்தியாசமானது. முதல் பாதிக்கு தலை கீழான இரண்டாம் பாதி.இரண்டாம் பாதியை செல்வராகவன் தன் அஸிஸ்டென்ட் டைரக்டர் யாரையாவது வைத்து எடுத்து விட்டாரா என நினைக்கும் அளவுக்கு!
சோழர்கள் ஏதோ காட்டு வாசிகளைப் போல சித்தரிக்கப்பட்டிருப்பது செம கடுப்பு. முதல் பாதியில் கச்சிதமாக பொருந்தும் நச் கதாபாத்திரம் ரீமாசென்னுக்கு. இரண்டாம் பாதியில் நாட்டியம்(?!) ஆடுவது கொடுமை. அதை விட மகா கொடுமை பார்த்திபனும் கார்த்தியும் ஆடும் காட்சி. சோழர்கள் டப்பாங்குத்து ஆடுகிறார்கள். இரண்டாம் பாதி கெட்டப்பில் ஆண்ட்ரியா ஆயா மாதிரி இருக்கிறார்.
முதல் பாதி முடியும் போது கார்த்தியின் காதிலிருந்து ரத்தம் வழியும் காட்சி உண்மையிலேயே அதிர்ச்சி. இரண்டாம் பாதி முடியும் போது நம் காதில் ரத்தம் வழிவது வேறு வகையான அதிர்ச்சி. ஆளாளுக்கு torture செய்கிறார்கள். முதல் பாதி செல்வராகன் டச் ரசிக்க வைத்தது என்றால் இரண்டாம் பாதியில் செல்வராகவன்தனங்கள் எரிச்சலடைய வைத்தது.இரண்டாம் பாதியில் இங்கும் அங்கும் சில நல்ல காட்சிகள் இருந்தாலும் அதை ரசிக்க முடியாத அளவுக்கு அதிகமான லாஜிக் மீறல்,இரைச்சல்.
கார்த்தியின் முதல் படமான பருத்திவீரனில் படம் முடிவதற்கு பத்து நிமிடம் முன்னதாக குடும்பத்தோடு வந்தவர்கள் வேகமாக தியேட்டரை விட்டு வெளியேறினார்கள்.ஆயிரத்தில் ஒருவனில் இடைவேளையிலேயே ஓடி விடுவது நல்லது.
ஆயிரத்தில் ஒருவனை கண்டிப்பாக hollywood-ல் இருந்து எடுத்தது என சொல்ல முடியாது.பொதுவாக இந்த genre-ல் உள்ள எல்லா படங்களிலும் நிறைய ஒற்றுமைகளை கண்டுபிடிக்க முடியும். Hollywood-ல் ஒரு வண்டி பிரம்மாண்டமான படங்கள் சப்பையான கதையுடன் தான் வெளிவருகின்றன. சமீபத்தில் வந்த அவதார் திரைப்படம் கூட மிக பழைய கதை தான்.அவதாரில் இருந்து டெக்னாலஜியை கழித்து விட்டால் அது ஆயிரத்தில் ஒருவனை விட மொக்கையாக இருந்த்திருக்கும்.
ஆனால் அவை சாதுர்யாமான கிராபிக்ஸ் காட்சிகளாலும் அபாரமான மார்க்கெட்டிங் திறமையாலும் தான் தப்பிக்கின்றன. ஆயிரத்தில் ஒருவனில் கிராபிக்ஸ் காட்சிகள் முழுமை பெறாமல் இருப்பது தான் படத்தின் பெரிய மைனஸ்.மற்றபடி ஆயிரத்தில் ஒருவன் உண்மையிலேயே ஆயிரத்தில் ஒரு படம் தான்.
தமிழில் Drama genre-ல் உலக படங்கள் தருவதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு டைரக்டர் செல்வராகவன் மட்டுமே.
கண்டிப்பாக ஒரு முறையாவது எல்லோரும் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் இது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)